செய்திகள்
ஹர்திக் பட்டேல் 12-ம் தேதி காங்கிரசில் இணைகிறார்
குஜராத் மாநிலத்தில் பட்டேல் இனத்தவர்களுக்கு கல்வி,வேலைவாய்ப்பில் ஒதுக்கீடு கேட்டு போராட்டம் நடத்திவரும் ஹர்திக் பட்டேல் ராகுல் காந்தி முன்னிலையில் 12-ம் தேதி காங்கிரசில் இணைகிறார். #HardikPatel #joinCongress
அகமதாபாத்:
குஜராத் மாநிலத்தில் பட்டேல் சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும், விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பது உள்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தி பட்டிடார் அனாமத் அன்டோலன் சமிதி என்ற இயக்கத்தின் தலைவர் ஹர்திக் பட்டேல் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தொடர்ச்சியாக 19 நாட்கள் உண்ணாவிரதம் இருந்தார்.
இதற்கு முன்னரும் பலமுறை இதே கோரிக்கைக்காக பலமுறை இவர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். சமீபத்தில் இவருக்கு திருமணம் நடந்தது.
இந்நிலையில், ராகுல் காந்தி முன்னிலையில் வரும் 12-ம் தேதி காங்கிரஸ் கட்சியில் இணையப்போவதாக ஹர்திக் பட்டேல் இன்று தெரிவித்துள்ளார். காங்கிரஸ் தலைமை தேர்தலில் போட்டியிடுமாறு உத்தரவிட்டால் போட்டியிடுவேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். #HardikPatel #joinCongress