செய்திகள்
பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு 200 சதவீதம் வரி - மத்திய அரசு அதிரடி
பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு இறக்குமதி செய்யும் அனைத்து பொருட்களுக்கும் இனி 200 சதவீதம் இறக்குமதி வரியாக விதிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. #ArunJaitley #PulwamaAttack
புதுடெல்லி:
புல்வாமாவில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் எதிரொலியாக மிகவும் முக்கியத்துவமான நாடு என வர்த்தகத்துக்கான முன்னுரிமையுடன் பாகிஸ்தானுக்கு அளிக்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை இந்தியா ரத்து செய்துள்ளது.
இந்நிலையில், பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு இறக்குமதி செய்யும் அனைத்து பொருட்களுக்கும் இனி 200 சதவீதம் அடிப்படை இறக்குமதி வரியாக (basic customs duty) விதிக்கப்படும். இந்த புதிய நடைமுறை உடனடியாக அமல்படுத்தப்படுகிறது என மத்திய நிதித்துறை மந்திரி அருண் ஜெட்லி இன்றிரவு அறிவித்துள்ளார். #PulwamaAttack #PakistanMFNstatus #MFNstatuswithdrawal #FMArunJaitley #goodsimportedfromPak #Customsduty #importedgoods
புல்வாமாவில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் எதிரொலியாக மிகவும் முக்கியத்துவமான நாடு என வர்த்தகத்துக்கான முன்னுரிமையுடன் பாகிஸ்தானுக்கு அளிக்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை இந்தியா ரத்து செய்துள்ளது.
புல்வாமா தாக்குதலை தொடர்ந்து நேற்று பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற உள்நாட்டு பாதுகாப்பு தொடர்பான ஆலோசனை கூட்டத்துக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மத்திய நிதித்துறை மந்திரி அருண் ஜெட்லி, ‘மிகவும் முக்கியத்துவமான நாடு என வர்த்தகத்துக்கு முன்னுரிமையுடன் பாகிஸ்தானுக்கு அளிக்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை இந்தியா ரத்து செய்துள்ளது’ என்று தெரிவித்தார்.
இந்நிலையில், பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு இறக்குமதி செய்யும் அனைத்து பொருட்களுக்கும் இனி 200 சதவீதம் அடிப்படை இறக்குமதி வரியாக (basic customs duty) விதிக்கப்படும். இந்த புதிய நடைமுறை உடனடியாக அமல்படுத்தப்படுகிறது என மத்திய நிதித்துறை மந்திரி அருண் ஜெட்லி இன்றிரவு அறிவித்துள்ளார். #PulwamaAttack #PakistanMFNstatus #MFNstatuswithdrawal #FMArunJaitley #goodsimportedfromPak #Customsduty #importedgoods