செய்திகள்

சத்தீஸ்கர் என்கவுண்டர் - 10 நக்சலைட்டுகளை சுட்டுக் கொன்றது பாதுகாப்பு படை

Published On 2019-02-07 15:29 IST   |   Update On 2019-02-07 15:29:00 IST
சத்தீஸ்கர் மாநிலத்தில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுண்டரில் 10 நக்சலைட்டுகள் கொல்லப்பட்டு உள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். #Naxalskilled #ChhattisgarhNaxalskilled
ராய்ப்பூர்:

சத்தீஸ்கர் மாநிலத்தின் பீஜாப்பூர் மாவட்டத்தில் பாய்ராம்கார் காவல் நிலையத்திற்கு உட்பட்ட காட்டுப் பகுதியில் பாதுகாப்பு படையினர் இன்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த பகுதியில் மறைந்து இருந்த நக்சலைட்கள் பாதுகாப்பு படையினரை நோக்கி தாக்குதல் நடத்தினர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாதுகாப்பு படையினரும் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 10 நக்சலைட்கள் கொல்லப்பட்டனர்.



இதுதொடர்பாக, பாதுகாப்பு படை அதிகாரிகள் கூறுகையில், கொல்லப்பட்ட நக்சலைட்களின் சடலங்கள் மற்றும் அங்கிருந்து 11 துப்பாக்கிகளும் மீட்கப்பட்டன. தொடர்ந்து, அந்தப் பகுதியில் தீவிர சோதனை நடைபெற்று வருகிறது என தெரிவித்துள்ளனர். #Naxalskilled #ChhattisgarhNaxalskilled
Tags:    

Similar News