செய்திகள்

கேரளாவின் கலாசாரத்தை கம்யூனிஸ்டு அரசு இங்கு சிதைக்கிறது - மோடி குற்றச்சாட்டு

Published On 2019-01-27 13:27 GMT   |   Update On 2019-01-27 13:27 GMT
கேரளாவின் கலாச்சாரத்தை அவமதிக்க இடதுசாரி அரசு எப்படி முயற்சி செய்கிறது என்பதற்கு சபரிமலை விவகாரமே உதாரணமாக விளங்குகிறது என பிரதமர் மோடி குற்றம் சாட்டினார். #PMModi #Sabarimalaissue #KeralaLeftgovt
திருவனந்தபுரம்:

கேரள மாநிலம் கொச்சியில் அமைந்துள்ள பிபிசி நிறுவன விழாவில் பங்கேற்க பிரதமர் மோடி இன்று கேரளா வந்தார். அதன்பின்னர், திருச்சூரில் பா.ஜ.க இளைஞரணியினர் மத்தியில் பிரதமர் மோடி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:

கேரள கலாச்சாரத்தை அவமதிக்க இடதுசாரி அரசு எப்படி முயற்சி செய்கிறது என்பதற்கு சபரிமலை விவகாரமே உதாரணமாக விளங்குகிறது.

சபரிமலை விவகாரம் ஒட்டுமொத்த தேசத்தின் கவனத்தையும் ஈர்த்தது. கேரள மாநிலத்தின் கலாச்சாரத்தை அழிக்க இடதுசாரி அரசு எப்படியெல்லாம் முயற்சி செய்தது என்பதை இந்திய மக்கள் அறிவார்கள். இடதுசாரி அரசு மாநிலத்தின் கலாச்சாரத்தை சிதைப்பது ஏன்? துரதிஷ்டவசமாக கேரளாவின் பண்பாடும் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. இவையனைத்து மாநிலத்தில் ஆட்சி செய்யும் கம்யூனிஸ்ட் அரசால் ஏற்பட்டது.



காங்கிரசும், இடதுசாரிகளும் ஜனநாயகம் பற்றி பேசுவது மிகவும் வேடிக்கையானது. எதிர்க்கட்சிகள் என்னை எப்படி வேண்டுமென்றாலும் தாக்கி பேசலாம், ஆனால் அவர்களால் விவசாயிகளை தவறாக வழிநடத்த முடியாது. இளைஞர்களுக்கான வாய்ப்புகளில் எதிர்க்கட்சிகள் இடையூறு ஏற்படுத்தக் கூடாது.

சபரிமலை விவகாரத்தில் கேரளாவிலும், டெல்லியிலும் காங்கிரஸ் முரண்பட்ட நிலைபாட்டில் உள்ளது. காங்கிரஸ் கூட்டணி அரசில் விஞ்ஞானி நம்பி நாராயணனை அரசியல் ஆதாயத்துக்காக பொய்வழக்கில் சிக்க வைத்தனர். அரசியல் ஆதாயத்துக்கு தேச நலனை சேதப்படுத்தியதுடன் தேசப்பற்றுமிக்க விஞ்ஞானிக்கும் தொல்லை தந்தனர். வலிமையான இந்தியாவை உருவாக்க உழைக்கும் ஒவ்வொருவரையும் நாங்கள் மதிக்கிறோம் என தெரிவித்துள்ளார். #PMModi #Sabarimalaissue #KeralaLeftgovt
Tags:    

Similar News