கிரிக்கெட் (Cricket)
null

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி டி20 - 3 மாற்றங்களுடன் இந்தியா முதலில் பேட்டிங்!

Published On 2025-12-19 19:04 IST   |   Update On 2025-12-19 19:11:00 IST
  • மோடி ஸ்டேடியத்தில் போட்டி நடைபெறுகிறது
  • இந்த போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனில் 3 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் மூன்று போட்டிகள் நிறைவடைந்த நிலையில், லக்னோவில் நடக்க இருந்த 4-வது போட்டி கடுமையான பனிமூட்டத்தால் 'டாஸ்' கூட போடப்படாமல் ரத்து செய்யப்பட்டது. இதனால் தொடரில் இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. 

இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி போட்டி குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று நடக்கிறது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் மார்க்ரம் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். அதன்படி இந்தியா முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.

இந்த போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனில் 3 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி ஹர்ஷித் ராணா, குல்தீப் யாதவ் மற்றும் காயத்தால் அவதிப்படும் சுப்மன் கில் ஆகியோருக்கு பதிலாக பும்ரா, வாஷிங்டன் சுந்தர் மற்றும் சஞ்சு சாம்சன் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்தியா: அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன், திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), ஹர்திக் பாண்ட்யா, ஷிவம் துபே. ஜிதேஷ் சர்மா, வாஷிங்டன் சுந்தர், வருண் சகரவர்த்தி, ஜஸ்பிரித் பும்ரா, அர்ஷ்தீப் சிங்.

தென் ஆப்பிரிக்கா: குயின்டன் டி காக், ரீசா ஹென்ட்ரிக்ஸ், ஐடன் மார்க்ரம் (கேப்டன்). டெவால்ட் ப்ரீவிஸ், டேவிட் மில்லர். டொனோவன் பெரீரா, ஜார்ஜ் லிண்டே, மார்கோ ஜான்சன், கார்பின் போஷ், லுங்கி நிகிடி, ஒட்னீல் பார்ட்மேன்

Tags:    

Similar News