செய்திகள்

குடியரசு தினவிழாவில் மின்சாரம் தாக்கி 3 பேர் பலி

Published On 2019-01-26 21:37 GMT   |   Update On 2019-01-26 21:37 GMT
பீகார் மாநிலத்தில் குடியரசு தினவிழாவில் எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கியதில் 3 பேர் உயிரிழந்தனர். #RepublicDay #Electrocuted
பாட்னா:

பீகார் மாநிலம் கோபால்கன்ஜ் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளியில் நேற்று குடியரசு தினவிழா நடந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கியதில் 2 பேர் உயிரிழந்தனர். 4 பேர் படுகாயம் அடைந்தனர்.

இதேபோல் பைகுந்த்பூரில் உள்ள அரசு அலுவலகத்தில் நடந்த குடியரசு தின விழாவில், அருகில் உள்ள உயர்அழுத்த மின்கம்பியில் கொடி கம்பம் உரசியதால், மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்தார். 4 பேர் படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
Tags:    

Similar News