செய்திகள்

அரியானா அடுக்குமாடி கட்டிட விபத்தில் பலி எண்ணிக்கை 6 ஆனது - பலியானோர் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிதி

Published On 2019-01-24 16:47 GMT   |   Update On 2019-01-24 16:47 GMT
அரியானாவில்அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது என மீட்புக் குழுவினர் தெரிவித்தனர். #GurugramBuildingCollapse
சண்டிகர்:

அரியானாவில் உள்ள குருகிராமம் பகுதியை சார்ந்த உல்லவாஸ் கிராமத்தில் நான்கு மாடி கட்டிடம் இன்று அதிகாலை திடீரென இடிந்து விழுந்தது.

இந்த விபத்தில் 3 பேர் சடலமாக மீட்கப்பட்டனர். மேலும் சிலர் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என முதல் கட்ட தகவல் வெளியானது.

தகவலறிந்து அங்கு சென்ற தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். அவர்கள் இடிபாடுகளில் சிக்கிய 5 பேரை காயத்துடன் மீட்டனர்.

இந்நிலையில், அரியானாவில்அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது என மீட்புக் குழுவினர் தெரிவித்தனர்.

இதுதொடர்பாக, பேரிடர் மீட்புக்குழு அதிகாரிகள் கூறுகையில், கட்டிட இடிபாடுகளில் சிக்கியிருந்த மேலும் 3 பேரின் உடல்கள் மீட்கப்பட்டு உள்ளன. இதையடுத்து, கட்டிட இடிபாடுகளில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது என தெரிவித்தனர்.

அடுக்குமாடி கட்டிட விபத்து பற்றி அறிந்த முதல் மந்திரி மனோகர் லால் கட்டார், விபத்தில் பலியானோருக்கு தனது  ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். மேலும், பலியானோர் குடும்பத்துக்கு தலா 3 லட்சம் நிதி வழங்கப்படும் என அறிவித்துள்ளார். #GurugramBuildingCollapse
Tags:    

Similar News