செய்திகள்

ஆந்திரா - 3,648 கி.மீ. பாதயாத்திரையை நிறைவு செய்தார் ஜெகன் மோகன் ரெட்டி

Published On 2019-01-09 15:30 GMT   |   Update On 2019-01-09 15:30 GMT
ஜெகன் மோகன் ரெட்டி இன்று சலூர் சட்டமன்ற தொகுதியில் இருந்து தனது பாதயாத்திரையை மீண்டும் தொடங்க உள்ளதாக அக்கட்சியின் கவுரவ தலைவர் விஜயம்மா தெரிவித்துள்ளார். #JaganmohanReddy #Yatra
ஐதராபாத்:

ஆந்திர மாநிலத்தின் முக்கிய எதிர்க்கட்சியான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருப்பவர் ஜெகன் மோகன் ரெட்டி. இவர் கடந்த 2017-ம் ஆண்டு நவம்பர் 6ம் தேதி கடப்பா மாவட்டம் புலிவெந்தலா பகுதியில் இருந்து பொதுமக்களுடன் பாதயாத்திரையை தொடங்கினார். தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களுக்கு பாதயாத்திரை மேற்கொண்டார்.
 
கடந்த அக்டோபர் 25-ம்  தேதி ஜெகன் மோகன் ரெட்டி விசாகப்பட்டினம் விமான நிலையத்துக்கு வந்தபோது, ஒரு வாலிபர் ‘செல்பி’ எடுப்பது போல் நடித்து அவரை கத்தியால் குத்தினார். இதில் காயம் அடைந்த ஜெகன் மோகன் ரெட்டி ஆஸ்பத்திரியில் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார். அவரை கத்தியால் குத்திய விமான நிலைய ஓட்டல் ஊழியரான சீனிவாஸ் என்பவரை போலீசார் கைது செய்தனர்.



இதற்கிடையே, ஜெகன் மோகன் ரெட்டி நவம்பர் 12-ம் தேதி மீண்டும் சலூர் சட்டமன்ற தொகுதியில் இருந்து தனது பாதயாத்திரையை தொடங்கினார்.

இந்நிலையில், ஜெகன்மோகன் ரெட்டி ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தின் இச்சாபுரம் பகுதியில் தனது பாதயாத்திரையை இன்று நிறைவு செய்தார்.

இதுவரை அவர், சுமார் 341 நாட்களில் 13 மாவட்டங்களில் உள்ள 134 சட்டசபை தொகுதிகளில் சுமார் 3 ஆயிரத்து 648 கிலோமீட்டர் தூரம் நடந்துள்ளார்.  

கடந்த சில ஆண்டுகளில் இதுபோல் 3 ஆயிரம் கி.மீ. தொலைவு நடந்தவர்களில் ஜெகன்மோகன் ரெட்டி முதல் அரசியல்வாதி என்பது குறிப்பிடத்தக்கது. #JaganmohanReddy #Yatra 
Tags:    

Similar News