செய்திகள்

பாராளுமன்ற தேர்தல் - தமிழக பாஜக பொறுப்பாளராக பியூஷ் கோயல் நியமனம்

Published On 2019-01-05 16:11 GMT   |   Update On 2019-01-05 16:11 GMT
பாராளுமன்ற தேர்தலுக்கான தமிழக பாஜக பொறுப்பாளராக பியூஷ் கோயலை நியமனம் செய்து பாஜக தலைமை இன்று அறிவித்துள்ளது. #BJP #TNElectionIncharge #PiyushGoyal
புதுடெல்லி:

மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. வரவுள்ள பாராளுமன்ற தேர்தலில் மீண்டும் ஆட்சியை பிடிக்க வேண்டும் என தீவிரமாக அதற்கான வேலைகளில் ஈடுபட்டு வருகிறது.

இந்நிலையில், பாஜக தலைமை இன்று வெளியிட்ட அறிக்கையில், பாராளுமன்ற தேர்தல் பொறுப்பாளர்களை நியமனம் செய்து அறிவித்துள்ளது.



அதன்படி, தமிழகத்திற்கு தேர்தல் பொறுப்பாளராக மத்திய மந்திரி பியூஷ் கோயல், புதுச்சேரிக்கு சி.டி.ரவி ஆகியோர் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.

இதேபோல், கர்நாடகா, டெல்லி, திரிபுரா, ஹரியானா, ஜம்மு காஷ்மீர், அந்தமான், உ.பி. உள்ளிட்ட 17 மாநிலங்களுக்கு பாஜக தேர்தல் பொறுப்பாளர்களை நியமனம் செய்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. #BJP #TNElectionIncharge #PiyushGoyal
Tags:    

Similar News