செய்திகள்
திருவாரூர் இடைத்தேர்தல் தொடர்பான வழக்குகள் - சுப்ரீம் கோர்ட்டில் 7ம் தேதி விசாரணை
திருவாரூர் இடைத்தேர்தல் தொடர்பான அனைத்து வழக்குகளும் ஜனவரி 7-ம் தேதி விசாரிக்கப்படும் என சுப்ரீம் கோர்ட் இன்று அறிவித்துள்ளது #SC #ThiruvarurByElection
புதுடெல்லி:
திருவாரூர் தொகுதிக்கான இடைத்தேர்தல் ஜனவரி 28ம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
ஆனால், கஜா புயல் பாதிப்பு சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருவதால் திருவாரூர் இடைத்தேர்தலை தள்ளிவைக்க கோரி கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த டி.ராஜா மற்றும் மாரிமுத்து, ரத்தினகுமார் ஆகியோர் தனித்தனியாக சுப்ரீம் கோர்ட்டில் மனுக்களை தாக்கல் செய்தனர்.
இந்நிலையில், திருவாரூர் இடைத்தேர்தல் தொடர்பான மனுக்கள் மீதான விசாரணை 7-ம் தேதி நடைபெறும் என சுப்ரீம் கோர்ட் இன்று அறிவித்துள்ளது.
கஜா புயலால் பாதிக்கப்பட்ட திருவாரூரில் நிவாரணப் பணிகளை மேற்கொள்ளலாம் என தேர்தல் ஆணையம் நேற்று அனுமதி அளித்தது குறிப்பிடத்தக்கது. #SC #ThiruvarurByElection