செய்திகள்

முத்தலாக் மசோதா மாநிலங்களவையில் 31-ம் தேதி தாக்கல்

Published On 2018-12-29 11:24 GMT   |   Update On 2018-12-29 11:24 GMT
முத்தலாக் முறையை தடை செய்து தண்டனைக்குரிய குற்றமாக்கும் மசோதா வரும் 31-ம் தேதி பாராளுமன்ற மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்படுகிறது. #TripleTalaqBill #RaviShankarPrasad #RajyaSabha
புதுடெல்லி:

கிறிஸ்துமஸ் பண்டிகை விடுமுறைக்கு பின்னர் பாராளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் நேற்று முன்தினம் கூடியபோது, மக்களவையில் முத்தலாக் மசோதா வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றப்பட்டது.

மாநிலங்களவையில் நேற்று எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டதால் நாள் முழுவதும் அவை ஒத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில், மக்களவையில் நிறைவேற்றப்பட்ட முத்தலாக் மசோதா வரும் 31-ம் தேதி மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்படும் என மத்திய சட்டத்துறை மந்திரி ரவிசங்கர் பிரசாத் இன்று தெரிவித்துள்ளார். #TripleTalaqBill #RaviShankarPrasad #RajyaSabha
Tags:    

Similar News