செய்திகள்

அயோத்தியில் ராமருடன் சீதைக்கும் சிலை வைக்க வேண்டும் - காங்கிரஸ் தலைவர் கோரிக்கை

Published On 2018-12-13 22:18 GMT   |   Update On 2018-12-13 22:18 GMT
அயோத்தியில் ராமர் சிலையுடன் சீதைக்கும் சிலை வைக்க வேண்டும் என்ற கோரிக்கையை காங்கிரஸ் மூத்த தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான கரன்சிங் கோரிக்கை விடுத்துள்ளார். #RamSita #CoupleStatue #Ayodhya #KaranSingh
லக்னோ:

அயோத்தியில் சரயு நதிக்கரையில் ராமருக்கு 151 மீட்டர் உயரத்தில் சிலை வைக்கப்படும் என்று உத்தரபிரதேச மாநில அரசு அறிவித்துள்ளது.

இந்த நிலையில், அங்கு ராமர் சிலையுடன் சீதைக்கும் சிலை வைக்க வேண்டும் என்ற கோரிக்கையை உத்தரபிரதேச மாநில அரசுக்கு காங்கிரஸ் மூத்த தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான கரன்சிங் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர், உத்தரபிரதேச மாநில முதல் மந்திரி யோகி ஆதித்யநாத்துக்கு ஒரு கடிதம் எழுதி உள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-

மிதிலையில் சீதை கல்யாணம் நடைபெற்றது. அதன்பின்னர் அவர் அயோத்திக்கு சென்றார். அங்கு சில காலம் இருந்தார். அதன்பின்னர் அவர் ராமருடனும், லட்சுமணனுடனும் 14 ஆண்டுகள் வனவாசம் போனார். மீண்டும் அயோத்திக்கு வந்தார். எனவே அயோத்தியில் ராமர் சிலைக்கு பக்கத்தில் சீதைக்கும் சிலை வைக்க வேண்டும். இந்த சிலை, ராமர் சிலை உயரத்தில் பாதியளவு இருக்க வேண்டும். இது சீதைக்கு கவுரவத்தை அளிக்கும்.

இவ்வாறு அவர் அதில் கூறி உள்ளார். #RamSita #CoupleStatue #Ayodhya #KaranSingh
Tags:    

Similar News