செய்திகள்

தீக்குளித்த ஐயப்ப பக்தர் இறந்ததால் நாளை முழு அடைப்பு - கேரளா பாஜக அறிவிப்பு

Published On 2018-12-13 16:38 GMT   |   Update On 2018-12-13 16:38 GMT
சபரிமலை விவகாரம் தொடர்பாக உண்ணாவிரதம் இருந்த இடத்தில் தீக்குளித்த ஐயப்ப பக்தர் இறந்ததை தொடர்ந்து, கேரளாவில் நாளை முழு அடைப்பு போராட்டத்துக்கு பாஜக அழைப்பு விடுத்துள்ளது. #SabarimalaiIssue #Kerala #BJP #Hardal
திருவனந்தபுரம்:

சபரிமலை விவகாரம் தொடர்பாக, கேரள மாநில அரசின் அணுகுமுறையை கண்டித்து அம்மாநில பாஜக சார்பில் கடந்த 4-ம் தேதி காலவரையற்ற தொடர் உண்ணாவிரத போராட்டம் தொடங்கப்பட்டது.

போராட்டத்தை பாஜக மாநில தலைவர் சி.கே.பத்மநாபன் தலைமை தாங்கி நடத்தி வருகிறார்.  திருவனந்தபுரத்தில், தலைமை செயலகம் எதிரில்  இந்த போராட்டம் நடைபெற்று வருகிறது.

இதற்கிடையே, இன்று அதிகாலை உண்ணாவிரம் போராட்டம் நடைபெற்ற பகுதியில் 49 வயது ஐயப்ப பக்தர் ஒருவர் சுவாமியே சரணம் ஐயப்பா  என்ற கோஷத்துடன் தனக்கு தானே தீவைத்து கொண்டார். அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.



விசாரணையில்,  தீக்குளித்தவர் பெயர் வேணுகோபாலன் நாயர் என்பதும், முத்தடா பகுதியை சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்தது. சிகிச்சை பலனிறி அவர் மருத்துவமனையில் இறந்தார்.

இந்நிலையில், சபரிமலை விவகாரம் தொடர்பாக உண்ணாவிரதம் இருந்த இடத்தில் தீக்குளித்த ஐயப்ப பக்தர் இறந்ததை தொடர்ந்து, கேரளாவில் நாளை முழு அடைப்பு போராட்டத்துக்கு பாஜக அழைப்பு விடுத்துள்ளது.

இதுதொடர்பாக பாஜகவினர் கூறுகையில், வேணுகோபாலன் நாயர் மரணத்துக்கு கேரள அரசின் அலட்சியமே காரணம். அவரது சாவுக்கு அரசே பொறுப்பேற்க வேண்டும். எனவே கேரள அரசை கண்டித்து நாளை முழு அடைப்பு போராட்டம் நடத்த உள்ளோம் என தெரிவித்தனர்.  #SabarimalaiIssue #Kerala #BJP #Hardal
Tags:    

Similar News