செய்திகள்

ராஜஸ்தான் சட்டசபை தேர்தல் - காங்கிரஸ் மூத்த தலைவர் அசோக் கெலாட் வெற்றி

Published On 2018-12-11 10:33 GMT   |   Update On 2018-12-11 10:33 GMT
ராஜஸ்தான் சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் மூத்த தலைவர் அசோக் கெலாட் 40 ஆயிரம் வாக்குகளுக்கும் அதிகமாக பெற்று வெற்றியடைந்தார். #RajatsthanAssemblyElections #Congress #AshokGehlot
ஜெய்ப்பூர்:

ராஜஸ்தானில் கடந்த 7-ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. மொத்தமுள்ள 200 சட்டசபை தொகுதிகளில் 199 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடத்தப்பட்டது. இதில் 74.21 சதவீத வாக்குகள் பதிவாகின.

இன்று காலை 8 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது. ஓட்டு எண்ணும் 40 மையங்களில் சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றன. பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. அதிக இடங்களில் காங்கிரஸ் வேட்பாளர்கள் முன்னிலை பெற்றதால், தொண்டர்கள் உற்சாகமடைந்தனர். 



இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலம் சர்தார்புரா தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் மூத்த தலைவர் அசோக் கெலாட் வெற்றி பெற்றுள்ளார்.

இவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் ஷம்பு சிங்கை விட 40 ஆயிரம் வாக்குகளுக்கு மேல் பெற்று வெற்றி பெற்றார். #RajatsthanAssemblyElections #Congress #AshokGehlot
Tags:    

Similar News