செய்திகள்
ஜம்மு காஷ்மீர் என்கவுண்டர் - 4 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
ஜம்மு காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் இன்று நடந்த துப்பாக்கி சண்டையின்போது, 4 பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றனர். #JKEncounter
ஸ்ரீநகர்:
சிறிது நேரம் நடந்த இந்த துப்பாக்கி சண்டையில் 4 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். பாதுகாப்பு படை தரப்பில் ஒரு வீரர் உயிரிழந்தார். 2 வீரர்கள் காயமடைந்தனர். தொடர்ந்து தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது. #JKEncounter
ஜம்மு காஷ்மீர் மாநிலம் சோபியான் மாவட்டம் நாடிகம் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து அப்பகுதியை இன்று காலையில் பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது பாதுகாப்பு படையினரை நோக்கி பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினர். பாதுகாப்பு படையினரும் பதில் தாக்குதல் நடத்தினர்.
சிறிது நேரம் நடந்த இந்த துப்பாக்கி சண்டையில் 4 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். பாதுகாப்பு படை தரப்பில் ஒரு வீரர் உயிரிழந்தார். 2 வீரர்கள் காயமடைந்தனர். தொடர்ந்து தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது. #JKEncounter