செய்திகள்

தெலுங்கானாவில் 2 நாட்கள் சோனியாகாந்தி பிரசாரம்

Published On 2018-11-11 08:15 GMT   |   Update On 2018-11-11 08:15 GMT
சோனியா காந்தி தெலுங்கானாவில் வருகிற 22 மற்றும் 23-ந் தேதிகளில் பிரசாரம் செய்து காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டுகிறார். #SoniaGandhi #Congress #Telangana
ஐதராபாத்:

119 தொகுதிகளை கொண்ட தெலுங்கானா மாநில சட்டசபைக்கு டிசம்பர் 7-ந் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது.

இங்கு ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள டி.ஆர்.எஸ்.கட்சி போராடியது.

காங்கிரஸ் கட்சி தெலுங்கு தேசம், இந்திய கம்யூனிஸ்டு கட்சிகளுடன் கூட்டணி அமைத்து ஆட்சியை பிடிக்கும் முயற்சியில் இறங்கி உள்ளது. இதேபோல் பா.ஜனதாவும் களத்தில் இருக்கிறது.

தெலுங்கானா தேர்தலில் வெற்றி பெற சோனியாகாந்தி பிரசாரம் செய்வது அவசியம் என்று காங்கிரஸ் தலைவர்கள் கருதுகிறார்கள். அவர்களின் விருப்பத்தை அகில இந்திய தலைமை ஏற்றுக் கொண்டது.

இதன்படி தெலுங்கானாவில் சோனியா காந்தி பிரசாரம் செய்கிறார்.



அவர் வருகிற 22 மற்றும் 23-ந் தேதிகளில் பிரசாரம் செய்து காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டுகிறார்.

வாரங்கல்லில் நடைபெறும் பொதுக்கூட்டத்திலும் சோனியா காந்தி பேசுகிறார். அவர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட இடங்களில் பிரசாரம் செய்கிறார். #SoniaGandhi #Congress #Telangana

Tags:    

Similar News