செய்திகள்

இடைத்தேர்தலில் பாஜகவுக்கு மக்கள் சரியான பாடம் புகட்டிவிட்டனர் - குமாரசாமி பெருமிதம்

Published On 2018-11-07 01:28 GMT   |   Update On 2018-11-07 01:28 GMT
கர்நாடக இடைத்தேர்தலில் பாஜகவுக்கு மக்கள் சரியான பாடம் புகட்டிவிட்டனர் என முதல் மந்திரி குமாரசாமி தெரிவித்துள்ளார். #KarnatakaBypoll #Kumarasamy
பெங்களூரு:

கர்நாடகம் மாநிலத்தில் 3 பாராளுமன்ற தொகுதிகள் மற்றும் 2 சட்டசபை தொகுதிகளுக்கு சமீபத்தில் இடைத்தேர்தல் நடைபெற்றது அன்று பதிவான வாக்குகளை எண்ணும் பணி நேற்று நடந்தது. இந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ் - மஜத கூட்டணி கட்சி 4 -1 என்ற கணக்கில் வென்றது.  

இந்நிலையில், கர்நாடக இடைத்தேர்தலில் பாஜகவுக்கு மக்கள் சரியான பாடம் புகட்டிவிட்டனர் என முதல் மந்திரி குமாரசாமி தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், கூட்டணிக்கு கிடைத்த தார்மீக வெற்றி. கர்நாடகாவில் காங்கிரஸ் - மதசார்பற்ற கூட்டணி நீடிக்காது எனக்கூறிய பாஜகவுக்கு மக்கள் சரியான பாடம் புகட்டிவிட்டனர்.



காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து நாடாளுமன்ற தேர்தலின்போது 28 தொகுதிகளில் வெற்றி பெறுவதே இலக்கு. அதன் முதல் படிதான் இந்த வெற்றி.

மக்கள் தங்கள் மீது வைத்துள்ள நம்பிக்கையை இடைத்தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்துகின்றன. இந்த வெற்றியால் அத்துமீறி செயல்படுபவர்களாக மாறமாட்டோம். தங்கள் கூட்டணி தொடர்பான பாஜக குற்றச்சாட்டை மக்கள் நிராகரித்து உள்ளனர் என தெரிவித்துள்ளார். #KarnatakaBypoll #Kumarasamy 
Tags:    

Similar News