செய்திகள்

பிரதமர் மோடியின் ஊழல் நிறுத்தப்படும் வரையில் இணைந்து போராடுவோம் - ராகுல்காந்தி

Published On 2018-10-26 21:32 GMT   |   Update On 2018-10-26 21:32 GMT
சிபிஐ அதிகாரிகள் கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்ட விவகாரத்தில், பிரதமரின் ஊழல் நிறுத்தப்படும் வரையில், மக்களும், எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து போராட வேண்டும் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.#RahulGandhi #PMModi #Rafale #CBI #Congress #BJP
புதுடெல்லி:

சிபிஐ இயக்குனர் மற்றும் சிறப்பு இயக்குனருக்கு இடையேயான ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு எடுத்த முடிவாய், இருவருக்கும் தற்காலிக விடுப்பு அளித்து மத்திய அரசு உத்தரவிட்டது. மேலும், பொறுப்பு இயக்குனராக நாகேஸ்வர ராவை நியமனம் செய்தது.

மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிர்க்கட்சியான காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. ரபேல் விவகாரத்தில் பிரதமரின் ஊழல் தொடர்பான ஆதாரங்களை அழிக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டினார்.

இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், நாட்டின் பல்வேறு இடங்களில் சிபிஐ அலுவலகங்களை முற்றுகையிட்டு காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தினர். சிபிஐ அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கைது செய்யப்பட்டார்.



இந்நிலையில், இதுதொடர்பாக சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ள ராகுல் காந்தி, ஊழலுக்கு எதிராகவும், ரபேல் விவகாரம் குறித்து சிபிஐ விசாரிக்க தடுப்பதை எதிர்த்தும், அநீதிக்கு எதிராகவும் ஆயிரக்கணக்கான இந்தியர்கள் குரல் கொடுக்க ஒன்றிணைந்துள்ளதாகவும், நாளுக்கு நாள் இந்த எண்ணிக்கை அதிகரிக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும், பிரதமரின் ஊழல்கள் நிறுத்தப்படும் வரையில் எதிர்க்கட்சிகளும், மக்களும் காங்கிரஸ் உடன் இணைந்து போராட வேண்டும் எனவும் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். #RahulGandhi #PMModi #Rafale #CBI #Congress #BJP
Tags:    

Similar News