செய்திகள்
நிலத்தகராறில் பெண்ணை கற்பழித்து பெண்ணுறுப்பை சிதைத்த உறவினர்
மேற்கு வங்காளத்தில் நிலத்தகராறு காரணமாக பெண்ணை கற்பழித்து, கொடூரமாக தாக்கிய உறவினரை போலீசார் கைது செய்துள்ளனர். #WestBengal
கொல்கத்தா:
மேற்கு வங்காள மாநிலம் ஜல்பைகுரி மாவட்டத்தில் பெண் ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் கிடப்பதை கண்ட ரிக்ஷா ஓட்டுனர் அவரை உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்தார். இதையடுத்து சம்பவம் குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டு வந்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
பாதிக்கப்பட்ட பெண்ணுக்கும் அவரது உறவினருக்கும் இடையே நிலம் தொடர்பாக தகராறு இருந்து வந்துள்ளது. சம்பவம் நடந்த அன்று நிலத்தகராறு குறித்து சமாதான பேச்சுவார்த்தைக்கு என உறவினர் அழைத்ததாக அந்த பெண் சென்றுள்ளார். அப்போது உறவினர் அவரை பாலியல் வன்புணர்வு செய்துள்ளார். அதுமட்டுமின்றி, அவரது பெண் உறுப்பில் இரும்பு கம்பியை நுழைத்து கொடுமையான சித்திரவதைகளை செய்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் பெண்ணை கற்பழித்த அந்த உறவினரையும், அவருக்கு உதவியாக இருந்த நபரையும் கைது செய்துள்ளனர். டெல்லியில் இளம்பெண் நிர்பயாவுக்கு நடந்ததுபோல அரங்கேற்றப்பட்ட இந்த கொடூர சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #WestBengal
மேற்கு வங்காள மாநிலம் ஜல்பைகுரி மாவட்டத்தில் பெண் ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் கிடப்பதை கண்ட ரிக்ஷா ஓட்டுனர் அவரை உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்தார். இதையடுத்து சம்பவம் குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டு வந்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
பாதிக்கப்பட்ட பெண்ணுக்கும் அவரது உறவினருக்கும் இடையே நிலம் தொடர்பாக தகராறு இருந்து வந்துள்ளது. சம்பவம் நடந்த அன்று நிலத்தகராறு குறித்து சமாதான பேச்சுவார்த்தைக்கு என உறவினர் அழைத்ததாக அந்த பெண் சென்றுள்ளார். அப்போது உறவினர் அவரை பாலியல் வன்புணர்வு செய்துள்ளார். அதுமட்டுமின்றி, அவரது பெண் உறுப்பில் இரும்பு கம்பியை நுழைத்து கொடுமையான சித்திரவதைகளை செய்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் பெண்ணை கற்பழித்த அந்த உறவினரையும், அவருக்கு உதவியாக இருந்த நபரையும் கைது செய்துள்ளனர். டெல்லியில் இளம்பெண் நிர்பயாவுக்கு நடந்ததுபோல அரங்கேற்றப்பட்ட இந்த கொடூர சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #WestBengal