செய்திகள்

மேற்கு வங்காளத்தில் பெட்ரோல், டீசல் விலையில் ரூ.1 குறைத்து மம்தா பானர்ஜி அறிவிப்பு

Published On 2018-09-11 10:54 GMT   |   Update On 2018-09-11 10:56 GMT
நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை விண்ணை முட்டி வரும் நிலையில், மேற்கு வங்காளத்தில் லிட்டருக்கு ரூ.1 குறைத்து முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். #PetrolDieselPriceHike #FuelPriceHike #MamataBanerjee
கொல்கத்தா:

நாடு முழுவதும் சமீப காலமாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. சாமானியர்களின் கழுத்தை நெறிக்கும் விலை உயர்வு குறித்து மத்திய அரசு வாய் திறக்காமல் மவுனம் காத்து வருகிறது. 

பெட்ரோல், டீசல் விலையை குறைப்பது மத்திய அரசின் கைகளில் இல்லை என பெட்ரோலிய துறை மந்திரி தர்மேந்திர பிரதான் வெளிப்படையாகவே கூறும் நிலையில் அரசு உள்ளது.

பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டியின் கீழ் கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வந்தாலும், மாநில அரசுகள் தங்களின் வருவாய் பாதிக்கும் என்பதால் இதனை ஏற்க மறுக்கிறது. மேலும், மாநில அரசுகள் பெட்ரோல், டீசல் மீதான வரியை குறைக்க வேண்டும் என மத்திய அரசு வலியுறுத்தி வருகிறது.

இந்நிலையில், ராஜஸ்தான் மற்றும் ஆந்திர பிரதேச அரசுகள் பெட்ரோல், டீசல் மீதான வரியை குறைத்து சமீபத்தில் அறிவிப்பு வெளியிட்டது. இதனை தொடர்ந்து, இன்று மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜியும் அம்மாநிலத்தில் பெட்ரோல், டீசல் மீதான விலையில் ரூ.1 குறைக்கப்படும் என அறிவித்துள்ளார்.

மத்திய அரசு கலால் வரியை குறைக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். 
Tags:    

Similar News