செய்திகள்

காஷ்மீரில் ரூ.100 கோடி ஹெராயின் பறிமுதல் - 4 பேர் கைது

Published On 2018-09-04 12:14 GMT   |   Update On 2018-09-04 12:14 GMT
பஞ்சாப் மாநிலத்தில் இருந்து காஷ்மீருக்கு போதைப்பொருள் கடத்த முயன்ற 4 பேரை கைது செய்த அதிகாரிகள் 100 கோடி ரூபாய் மதிப்பிலான ஹெராயினை பறிமுதல் செய்தனர். #Rs100crore #Rs100croreHeroin #Heroinseized
ஸ்ரீநகர்:

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் கத்துவா மாவட்டத்துக்கு உட்பட்ட பாலி மோர்ஹ் பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அம்மாநில போதைப்பொருள் கடத்தல் தடுப்புத்துறை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுப்பட்டிருந்தனர்.

அப்போது, அவ்வழியாக வேகமாக வந்த ஒரு காரை மடக்கி சோதனையிட்டபோது, காரினுள் 22.145 கிலோ ஹெராயின் மறைத்து வைக்கப்பட்டிருந்ததை கண்டுபிடித்த அதிகாரிகள் காருடன் போதைப்பொருளை பறிமுதல் செய்தனர்.

பஞ்சாப் மாநிலத்தின் ஹன்ட்வாரா நகரில் இருந்து இந்த ஹெராயினை கடத்திவந்த 3 பேரை கைது செய்த அதிகாரிகள், கடத்தல் ஹெராயினை பெற்றுகொள்ள காஷ்மீரில் காத்திருந்தவரையும் கைது செய்தனர்.

கைப்பற்றப்பட்ட ஹெராயினின் சந்தை மதிப்பு சுமார் 100 கோடி என தெரியவந்துள்ளது. #Rs100crore  #Rs100croreHeroin #Heroinseized 
Tags:    

Similar News