செய்திகள்

உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது - எடியூரப்பா பேட்டி

Published On 2018-09-04 11:26 GMT   |   Update On 2018-09-04 11:26 GMT
கர்நாடகாவில் உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என்று பாரதிய ஜனதா தலைவர் எடியூரப்பா கூறியுள்ளார். #KarnatakaLocalBodyElections
பெங்களூரு:

கர்நாடகாவில் நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் மைசூரு, தும்கூரு, சிவமொக்கா ஆகிய 3 மாநகராட்சிகளில் சிவமொக்கா மாநகராட்சியை பாரதிய ஜனதா பிடித்துள்ளது. மைசூரு, தும்கூரு ஆகிய 2 மாநகராட்சிகளில் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி ஆதரவுடன் காங்கிரஸ் கட்சி மேயர் பதவிகளை கைப்பற்றுகிறது.

இந்நிலையில் உள்ளாட்சி தேர்தல் முடிவு குறித்து கர்நாடக மாநில பாரதிய ஜனதா தலைவரும், முன்னாள் முதல்-மந்திரியுமான எடியூரப்பா கூறியதாவது:-

உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. பாராளுமன்ற தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை பெறுவோம்.

இவ்வாறு அவர் கூறினார். #KarnatakaLocalBodyElections
Tags:    

Similar News