செய்திகள்

உ.பி.யின் அமேதியில் மழைக்கு 7 பேர் பரிதாப பலி

Published On 2018-08-28 22:29 GMT   |   Update On 2018-08-28 22:29 GMT
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் கடந்த இரண்டு நாள்களாக பெய்த மழைக்கு 7 பேர் பலியாகியுள்ளனர். #UPRain
லக்னோ:

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் கடந்த இரு தினங்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் மழை தொடர்பான விபத்துக்கள் ஏற்பட்டு வருகின்றன.

மழையால் சுவர் இடிந்து விழுந்த விபத்தில் ஏற்கனவே 5 பேர் பலியாகினர். மேலும், தண்ணீரில் மூழ்கி 5 வயது சிறுமி பலியானது சோகத்தை ஏற்படுத்தியது.

கடந்த இரு தினங்களாக பெய்த மழைக்கு உ.பி.யில் இதுவரை 7 பேர் பலியாகியுள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்தனர். #UPRain
Tags:    

Similar News