செய்திகள்

கற்பழிப்பு சம்பவங்களை சகித்து கொள்ள முடியாது - மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேச்சு

Published On 2018-08-26 15:36 IST   |   Update On 2018-08-26 15:36:00 IST
மன் கி பாத் நிகழ்ச்சி மூலம் மக்களிடையே உரையாற்றிய பிரதமர் மோடி, கற்பழிப்பு சம்பவங்களை சகித்து கொள்ள முடியாது என தெரிவித்துள்ளார். #Modi #MannKiBaat
புதுடெல்லி:

மாதந்தோறும் பிரதமர் மோடி மன் கி பாத் எனும் வானொலி நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களிடம் உரையாற்றி வருகிறார். அதுபோல், இன்று மன் கி பாத் நிகழ்ச்சி மூலம் பிரதமர் மோடி உரையாற்றினார்.

அப்போது, முத்தலாக் மசோதா ராஜ்ஜிய சபாவில் நிறைவேற்றப்படவில்லை என கூறிய அவர், இஸ்லாமிய பெண்களுக்கு கிடைக்க வேண்டிய சமூக நீதியை பெற்று தர இந்தியாவே அவர்களுக்கு துணை நிற்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளை சகித்துக் கொண்டு இருக்க முடியாது எனவும், அதை கருத்தில் கொண்டே பெண்களை கற்பழிப்பவர்களுக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், சிறுமிகளை கற்பழிப்பவர்களுக்கு மரண தண்டனையும் விதிக்கும் சட்டத்தை இயற்றியுள்ளதாக கூறியுள்ளார்.  #Modi #MannKiBaat
Tags:    

Similar News