செய்திகள்

கேரள வெள்ள சேதத்தை தேசிய பேரிடராக அறிவிக்க ராகுல் காந்தி கோரிக்கை

Published On 2018-08-18 23:04 GMT   |   Update On 2018-08-18 23:04 GMT
கேரள வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு நிகழ்ந்துள்ள இந்த இயற்கை சீற்றத்தை தேசிய பேரிடராக அறிவிக்குமாறு பிரதமர் மோடிக்கு, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வேண்டுகோள் விடுத்துள்ளார். #KeralaRain #Keralaflood #RahulGandhi
புதுடெல்லி:

கேரளாவில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை மற்றும் அணைகள் திறப்பால் ஒட்டுமொத்த மாநிலமும் வெள்ளத்தில் மிதக்கிறது. அத்துடன் பல இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டு மக்களின் பாதுகாப்புக்கு மிகுந்த அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது.



மாநிலம் முழுவதும் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது. எனினும் பல இடங்களில் மக்கள் இன்னும் தங்கள் வீடுகளிலேயே முடங்கி கிடக்கின்றனர். கேரள வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு நிகழ்ந்துள்ள இந்த இயற்கை சீற்றத்தை தேசிய பேரிடராக அறிவிக்குமாறு பிரதமர் மோடிக்கு, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் தனது டுவிட்டர் தளத்தில் கூறுகையில், ‘அன்புக்குரிய பிரதமரே, தயவுசெய்து கேரள வெள்ளப்பெருக்கை எவ்வித தாமதமும் இன்றி தேசிய பேரிடராக அறிவியுங்கள். நமது லட்சக்கணக்கான மக்களின் உயிரும், வாழ்வாதாரமும், எதிர்காலமும் ஆபத்தில் இருக்கிறது’ என்று குறிப்பிட்டு உள்ளார். முன்னதாக மாநிலத்தில் வெள்ளத்தால் பாதித்த பகுதிகளில் நிவாரண பணிகளை மேற்கொள்ளுமாறு காங்கிரஸ் தொண்டர்களுக்கு அவர் நேற்று முன்தினம் அழைப்பு விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.   #KeralaRain #Keralaflood

Tags:    

Similar News