செய்திகள்

கட்சியினர் தடுக்கப்பட்ட விவகாரம் - போராட்டத்தில் ஈடுபட திரிணாமுல் காங்கிரஸ் திட்டம்

Published On 2018-08-03 10:36 GMT   |   Update On 2018-08-03 10:36 GMT
அசாம் குடிமக்கள் பட்டியல் விவகாரம் தொடர்பாக அசாம் சென்ற திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் மாநிலத்துக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டதை கண்டித்து நாளை மறுநாள் போராட்டம் நடத்த உள்ளதாக தெரிவித்துள்ளது. #NRCBill #TMC
கொல்கத்தா:

அசாம் மாநிலத்தின் குடிமக்கள் பட்டியல் சமீபத்தில் வெளியிடப்பட்டது. அதில் 40 லட்சம் பெயர்கள் நீக்கப்பட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றனர். இதற்கு மக்களவை மற்றும் மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டும் வருகின்றனர்.



இதையடுத்து, அசாம் மாநிலத்துக்கு திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் சென்ற போது, விமான நிலையத்திலேயே அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர். அவர்கள் பல மணி நேரம் காத்திருந்தும், மாநிலத்துக்குள் நுழைய அவர்கள் அனுமதிக்கப்படவில்லை. இதற்கு மக்களவையில் இன்று திரிணாமூல் காங்கிரஸ் கட்சியினர் அமளியில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், நாளை (4.8.18) கருப்பு தினமாக அனுசரிக்க உள்ளதாகவும், இந்த விவகாரத்தை கண்டித்து, ஞாயிறு அன்று மிகப்பெரிய போராட்டம் நடத்த இருப்பதாகவும் மேற்கு வங்காள மந்திரி பர்தா சட்டர்ஜீ தெரிவித்துள்ளார். #NRCBill #TMC
Tags:    

Similar News