செய்திகள்

ராகுல் காந்திக்கு துணைவி கிடைக்க வேண்டும் - பிரார்த்தனை செய்த சாத்வி பிராச்சி

Published On 2018-07-31 00:52 GMT   |   Update On 2018-07-31 00:52 GMT
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு விரைவில் துணைவி கிடைக்க வேண்டும் என்பதற்காக பிரார்த்தனை செய்ய வந்தேன் என பெண் துறவி சாத்வி பிராச்சி தெரிவித்துள்ளார். #SadhviPrachi #RahulGandhi
லக்னோ:

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள கோரக்பூரில் அமைந்துள்ளது கோரக்நாத் கோவில். இந்த கோவிலுக்கு நேற்று இந்துத்துவா தலைவர் சாத்வி பிராச்சி வருகை தந்தார். அப்போது அவர் செய்தியாளர்களை சந்தித்தார். 

அவர்களிடம் சாத்வி பிராச்சி பேசுகையில், நான் எப்போதும் இந்த கோவிலுக்கு வருவது வழக்கம். ஆனால் இந்த முறை ஒரு சிறப்பு பிரார்த்தனைக்காக வந்துள்ளேன்.

மத்தியில் ஆட்சி அமைக்க தேவையான பெரும்பான்மையை காங்கிரஸ் பெறவில்லை. எனவே, ராகுலுக்கு விரைவில் நல்ல துணைவியாவது கிடைக்க வேண்டும் என பிரார்த்திக்கவே இப்போது வந்துள்ளேன் என கூறினார்.



காங்கிரஸ் தலைவர் ராகுலுக்கு துணைவி கிடைக்க வேண்டும் என பெண் துறவி வேண்டிக் கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுகுறித்து, உ.பி. காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் அசோக் சிங் கூறுகையில், பிரபலமானவர்களை பற்றி கருத்து கூறுவது தற்போது இது டிரெண்டாக உருவாகி வருகிறது.

சாத்வி தன்னை நிலைநிறுத்திக் கொள்ள இதுபோன்ற கருத்துக்களை கூறி வருகிறார். இது அருவருக்கத்தக்க செயல் என தெரிவித்தார். #SadhviPrachi #RahulGandhi
Tags:    

Similar News