செய்திகள்
சத்தீஸ்கரில் 3 நக்சலைட்டுகள் என்கவுண்டரில் சுட்டுக்கொலை
சத்தீஸ்கர் மாநிலத்தில் நடந்த என்கவுண்டரில் 3 நக்சலைட்டுகள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. #NaxalsGunnedDown #Chhattisgarh
ராய்ப்பூர்:
சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சலைட்டுகளை ஒடுக்கும் பணியில் போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். தேடுதல் வேட்டையின்போது நடந்த மோதல்களில் நக்சலைட்டுகள் சுட்டுக்கொல்லப்படுகின்றனர்.
இந்நிலையில், தண்டேவாடா பகுதியில் நக்சலைட்டுகள் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து போலீசார் அங்கு தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். இதையடுத்து அப்பகுதியில் நக்சலைட்டுகள் இருப்பதை உறுதி செய்த காவல்துறையினர் அவர்களை பிடிக்க முற்பட்டனர்.
போலீசாரை கண்ட நக்சலைட்டுகள் அவர்களிடம் இருந்து தப்புவதற்காக துப்பாக்கியால் சுட்டனர். இதனால் ஒரு போலீஸ் அதிகாரி காயமடைந்தார். இதையடுத்து, போலீசார் நடத்திய பதில் தாக்குதலில் 3 நக்சலைட்டுகள் சுட்டு வீழ்த்தப்பட்டனர். காயமடைந்த போலீஸ் அதிகாரி சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். #NaxalsGunnedDown #Chhattisgarh
சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சலைட்டுகளை ஒடுக்கும் பணியில் போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். தேடுதல் வேட்டையின்போது நடந்த மோதல்களில் நக்சலைட்டுகள் சுட்டுக்கொல்லப்படுகின்றனர்.
இந்நிலையில், தண்டேவாடா பகுதியில் நக்சலைட்டுகள் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து போலீசார் அங்கு தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். இதையடுத்து அப்பகுதியில் நக்சலைட்டுகள் இருப்பதை உறுதி செய்த காவல்துறையினர் அவர்களை பிடிக்க முற்பட்டனர்.
போலீசாரை கண்ட நக்சலைட்டுகள் அவர்களிடம் இருந்து தப்புவதற்காக துப்பாக்கியால் சுட்டனர். இதனால் ஒரு போலீஸ் அதிகாரி காயமடைந்தார். இதையடுத்து, போலீசார் நடத்திய பதில் தாக்குதலில் 3 நக்சலைட்டுகள் சுட்டு வீழ்த்தப்பட்டனர். காயமடைந்த போலீஸ் அதிகாரி சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். #NaxalsGunnedDown #Chhattisgarh