செய்திகள்
ஜி.எஸ்.டியால் நாடு வளர்ச்சி அடைந்துள்ளது - பிரதமர் மோடி பெருமிதம்
ஜி.எஸ்.டி வரி அறிவித்து ஒராண்டு நிறைவு பெற்ற நிலையில், ஜி.எஸ்.டி வரி விதிப்பால் நாட்டில் வளர்ச்சியும், வெளிப்படைத்தன்மையும் அதிகரித்துள்ளதாக மோடி தெரிவித்துள்ளார். #GSTForNewIndia
புதுடெல்லி:
நாடு முழுவதும் ஒரே வரி என்ற கொள்கையின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட ஜி.எஸ்.டி வரி விதிப்பு முறை அமல்படுத்தப்பட்டு இன்றுடன் ஓராண்டு காலம் நிறைவடைகிறது.
முன்னதாக, சமீபத்தில் ‘மன் கி பாத்’ வானொலி நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, ஒருங்கிணைந்த கூட்டாட்சிக்கான சிறந்த உதாரணமாக ஜி.எஸ்.டி அமைந்துள்ளதாக தெரிவித்திருந்தார். #GSTForNewIndia
நாடு முழுவதும் ஒரே வரி என்ற கொள்கையின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட ஜி.எஸ்.டி வரி விதிப்பு முறை அமல்படுத்தப்பட்டு இன்றுடன் ஓராண்டு காலம் நிறைவடைகிறது.
இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பிரதமர் மோடி கருத்து பதிவிட்டுள்ளார். ஜி.எஸ்.டி வரி விதிப்பு முறையால், உற்பத்தி அதிகரித்துள்ளதாகவும், தொழில்முனைவோருக்கு எளிமையாக அமைந்துள்ளதாகவும், சிறு குறு தொழிலதிபர்களுக்கு பலனளித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, சமீபத்தில் ‘மன் கி பாத்’ வானொலி நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, ஒருங்கிணைந்த கூட்டாட்சிக்கான சிறந்த உதாரணமாக ஜி.எஸ்.டி அமைந்துள்ளதாக தெரிவித்திருந்தார். #GSTForNewIndia