செய்திகள்
டெல்லியில் முக்தார் அப்பாஸ் நக்வி இப்தார் விருந்து - ராஜ்நாத் சிங், ஸ்மிருதி இரானி பங்கேற்பு
தலைநகர் டெல்லியில் மத்திய மந்திரி முக்தார் அப்பாஸ் நக்வி அளித்த இப்தார் விருந்தில் உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் மற்றும் ஸ்மிருதி இரானி உள்பட பலர் பங்கேற்றனர். #IftarParty #MukhtarAbbasNaqvi
புதுடெல்லி:
மத்தியில் பாஜக தலைமையிலான அமைச்சரவையில் சிறுபான்மை நலத்துறை மந்திரியாக பதவி வகித்து வருபவர் முக்தார் அப்பாஸ் நக்வி.
இவர் தலைநகர் டெல்லியில் இன்று இப்தார் விருந்து அளித்தார். இந்த விருந்தில் உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் மற்றும் மத்திய மந்திரிகள் பிரகாஷ் ஜவடேகர், ஸ்மிருதி இரானி உள்பட முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.
முத்தலாக்கால் பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் அவர்களது உறவினர்களுக்க்காகவே இந்த இப்தார் விருந்து அளிக்கப்படுகிறது என முக்தார் அப்பாஸ் நக்வி தெரிவித்துள்ளார். #IftarParty #MukhtarAbbasNaqvi