செய்திகள்

ஜம்மு காஷ்மீரில் கை யெறிகுண்டு தாக்குதல் - 16 பேர் படுகாயம்

Published On 2018-06-04 14:14 IST   |   Update On 2018-06-04 14:14:00 IST
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாதிகள் இன்று கை யெறிகுண்டு தாக்குதல் நடத்தியதில் 16 பேர் படுகாயம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. #GrenadeAttack
ஸ்ரீநகர் : 

ஜம்மு காஷ்மீர் மாநிலம், சோபியன் மாவட்டத்தில் உள்ள பரபரப்பான மார்க்கெட் பகுதியில் பயங்கரவாதிகள் இன்று கை யெறி குண்டு தாக்குதல் நடத்தியதில் 4 போலீசார் மற்றும் 12 பொதுமக்கள் என 16 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். 

சோபியன் பகுதியில் இருந்த பாதுகாப்பு படையினரை குறிவைத்து இந்த தாக்குதலை பயங்கரவாதிகள் நடத்தியுள்ளனர். தாக்குதலுக்கு பின்னர் அப்பகுதி போலீசாரால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது. தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #GrenadeAttack
Tags:    

Similar News