செய்திகள்

தெலுங்கானாவில் அரசு பேருந்து மீது லாரி மோதி பயங்கர விபத்து - 7 பேர் பரிதாப பலி

Published On 2018-05-29 08:15 GMT   |   Update On 2018-05-29 08:15 GMT
தெலுங்கானா மாநிலம் கரீம்நகர் மாவட்டத்தில் அரசு பேருந்து எதிரே வந்த லாரி மீது மோதிய கோர விபத்தில் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். #Karimnagaraccident
ஐதராபாத்:

தெலுங்கானா மாநிலத்தில் அரசு பேருந்து ஒன்று வராங்கல் மாவட்டத்திலிருந்து கரீம்நகருக்கு சென்று கொண்டிருந்தது. பேருந்தானது கரீம்நகர் மாவட்டத்தில் உள்ள செங்கர்லா கிராமத்திற்கு அருகில் செல்லும் போது எதிரே வேகமாக வந்த லாரி பேருந்து மீது பயங்கரமாக மோதியது. இதில் பேருந்து நொறுங்கியது.

இந்த விபத்தில் இரண்டு பெண்கள் உட்பட 6 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். படுகாயமடைந்த 15 பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்களில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மற்றவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.


இந்நிலையில், விபத்தில் உயிரிழந்தவர் குடும்பங்களுக்கு முதல்வர் கே.சந்திரசேகர் தனது இரங்கலை தெரிவித்து கொண்டார். மேலும், பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான உதவிகள் அளிக்கப்படும் எனஉறுதியளித்தார். #Karimnagaraccident
Tags:    

Similar News