உள்ளூர் செய்திகள்
- மதுரை அருகே கீழே தவறி விழுந்து பெண் பலியானார்.
- மதுரை மாவட்டம் திருமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் ஆவார்.
திருமங்கலம்
மதுரை மாவட்டம் திருமங்கலம் தெற்குத் தெரு சேர்ந்தவர் பதினெட்டாம்படி கருப்பு. இவருடைய மனைவி வைரமணி (வயது56).
இவர் கடந்த 15-ந் தேதி வீட்டின் வெளியே இருந்த திண்ணையில் தூங்கிக் கொண்டிருந்தார்.
அப்போது திண்ணையிலிருந்து வைரமணி கீழே விழுந்து விட்டார். இதில் தலையில் பலத்த காயம் அடைந்து திருமங்கலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக மதுரை அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி வைரமணி இறந்தார்.
திருமங்கலம் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.