செய்திகள்

கிருஷ்ணகிரி பாராளுமன்றத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் டாக்டர்.ஏ.செல்லகுமார் முன்னிலை

Published On 2019-05-23 11:21 GMT   |   Update On 2019-05-23 11:21 GMT
கிருஷ்ணகிரி பாராளுமன்றத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் டாக்டர்.ஏ.செல்லகுமார், சுமார் 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.
கிருஷ்ணகிரி:

பாராளுமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன. தமிழகம் மற்றும் புதுவையில் தேர்தல் நடைபெற்ற 39 பாராளுமன்றத் தொகுதிகளில் திமுக கூட்டணி பெரும்பாலான தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது.

கிருஷ்ணகிரி பாராளுமன்றத் தொகுதியில் 14 சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில் காங்கிரஸ் வேட்பாளர் டாக்டர்.ஏ.செல்லகுமார், 3,74,397 வாக்குகள் பெற்று தொடர்ந்து முன்னிலை பெற்றிருந்தார். அதிமுக வேட்பாளர் கே.பி.முனுசாமி 2,86,831 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தில் இருந்தார்.

நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மதுசூதனன் 16 ஆயிரத்து 253 வாக்குகளும், மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் காருண்யா 8 ஆயிரத்து 558 வாக்குகளும், அமமுக வேட்பாளர் கணேசகுமார் 5 ஆயிரத்து 446 வாக்குகளும் பெற்றிருந்தனர்.
Tags:    

Similar News