செய்திகள்

சூலூர்- அரவக்குறிச்சியில் ப.சிதம்பரம் இன்றும் நாளையும் பிரசாரம்

Published On 2019-05-09 04:32 GMT   |   Update On 2019-05-09 04:32 GMT
சூலூர் மற்றும் அரவக்குறிச்சி தொகுதி தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் இன்றும், நாளையும் பிரசாரம் செய்கிறார். #TNByPolls #PChidambaram
சென்னை:

சூலூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம் ஆகிய சட்டசபை தொகுதிகளில் வருகிற 19-ந்தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இந்த தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து தலைவர்கள் சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சூலூர் மற்றும் அரவக்குறிச்சி தொகுதி தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் இன்றும், நாளையும் பிரசாரம் செய்கிறார்.

சூலூர் தொகுதி தி.மு.க. வேட்பாளர் பொங்கலூர் பழனிசாமியை ஆதரித்து கருமத்தம்பட்டியில் இன்று மாலை 6 மணிக்கு தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடக்கிறது. இதில் முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி ஆகியோர் கலந்துகொண்டு பேசுகிறார்கள்.

அரவக்குறிச்சி தொகுதி தி.மு.க. வேட்பாளர் செந்தில் பாலாஜியை ஆதரித்து வேலாயுதம்பாளையத்தில் நாளை (10-ந்தேதி) மாலை 6 மணிக்கு தேர்தல் பிரசார பொதுகூட்டம் நடக்கிறது. இதிலும் முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி ஆகியோர் கலந்துகொண்டு பேசுகிறார்கள். #TNByPolls #PChidambaram
Tags:    

Similar News