செய்திகள்
தேர்தல் வீதிமீறல்: டி.டி.வி. தினகரன் மீது வழக்கு
தேர்தல் விதிகளை மீறியதாக டி.டி.வி. தினகரன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். #LokSabhaElections2019 #TTVDhinakaran
ராமநாதபுரம்:
ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதியில் அ.ம.மு.க. சார்பில் வ.து.ந. ஆனந்த் போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து தொகுதிக்குட்பட்ட முக்கிய பகுதிகளில் அ.ம.மு.க துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் கடந்த 9-ந் தேதி திறந்த ஜீப்பில் சென்று பிரசாரம் செய்தார்.
அப்போது அவர் அனுமதிக்கப்பட்ட அளவுக்கு மேல் அதிக வாகனங்களில் பேரணியாக வந்ததாக புகார் எழுந்தது.
இது குறித்து தேர்தல் பறக்கும் படை அலுவலர் ரமேஷ்குமாரி முதுகுளத்தூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி டி.டி.வி. தினகரன், வேட்பாளர் வ.து.ந. ஆனந்த் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதியில் அ.ம.மு.க. சார்பில் வ.து.ந. ஆனந்த் போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து தொகுதிக்குட்பட்ட முக்கிய பகுதிகளில் அ.ம.மு.க துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் கடந்த 9-ந் தேதி திறந்த ஜீப்பில் சென்று பிரசாரம் செய்தார்.
அப்போது அவர் அனுமதிக்கப்பட்ட அளவுக்கு மேல் அதிக வாகனங்களில் பேரணியாக வந்ததாக புகார் எழுந்தது.
இது குறித்து தேர்தல் பறக்கும் படை அலுவலர் ரமேஷ்குமாரி முதுகுளத்தூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி டி.டி.வி. தினகரன், வேட்பாளர் வ.து.ந. ஆனந்த் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.