செய்திகள்

அதிமுக கூட்டணிக்கு எதிர்ப்பு- பாமக மாநில துணை தலைவர் விலகல்

Published On 2019-04-10 09:14 GMT   |   Update On 2019-04-10 09:14 GMT
அ.தி.மு.க. கூட்டணிக்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ம.க. மாநில துணை தலைவர் பொங்கலூர் மணிகண்டன் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். #PMK #PongalurManikandan
கோவை:

பா.ம.க.வின் மாநில துணை தலைவராக இருந்தவர் பொங்கலூர் மணிகண்டன். இவர் இன்று பா.ம.க.வின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கோவையில் நிருபர்களிடம் கூறும் போது, அ.தி.மு.க.-பா.ம.க. கூட்டணியை மக்கள் விரும்பவில்லை. மக்களுக்கு இந்த கூட்டணி பிடிக்கவில்லை. அதனால் பா.ம.க.வில் இருந்து விலகுகிறேன். காடு வெட்டி குரு பா.ம.க.விற்காக பாடுபட்டார். ஆனால் அவரது கடனை அடைக்க அவர்கள் எதுவும் கொடுக்கவில்லை.


8 வழிச்சாலை தீர்ப்பை எதிர்த்து அ.தி.மு.க. அமைச்சர் மேல்முறையீடு செய்வேன் என்கிறார். ஆனால் இது குறித்து அன்புமணி அறிக்கை எதுவும் வெளியிடவில்லை. பா.ம.க.வை விட திராவிட கட்சிகளே மேல். பா.ம.க.வில் இருந்து பலர் விலக உள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார். #PMK #PongalurManikandan
Tags:    

Similar News