செய்திகள்

திருப்போரூரில் அதிமுக வேட்பாளர் ஆறுமுகத்தை ஆதரித்து அன்புமணி பிரசாரம்

Published On 2019-04-05 14:48 IST   |   Update On 2019-04-05 14:48:00 IST
காஞ்சிபுரம் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் மரகதம் குமரவேல் மற்றும் திருப்போரூர் சட்டமன்ற வேட்பாளர் எஸ்.ஆறுமுகம் ஆகியோருக்கு ஆதரவாக அன்புமணிராமதாஸ் திருப்போரூரில் தீவிர பிரசாரம் மேற்கொண்டார். #Loksabhaelections2019

திருப்போரூர், ஏப். 5-

காஞ்சிபுரம் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் மரகதம் குமரவேல், மற்றும் திருப்போரூர் சட்டமன்ற வேட்பாளர் எஸ்.ஆறுமுகம் ஆகியோருக்கு ஆதரவாக பாட்டாளி மக்கள் கட்சி இளைஞரணி தலைவர் டாக்டர். அன்புமணிராமதாஸ் திருப்போரூரில் தீவிர பிரசாரம் மேற்கொண்டார். இப்பகுதியில் பல நல்ல திட்டங்களை நிறைவேற்ற இருவரையும் வெற்றி பெற செய்யவும், போக்குவரத்திற்காக பங்கிங்காம் கால்வாய் ஆழப்படுத்தி நீர்வழிச்சாலை நிறைவேற்றப்டும். என கூறினார். அதிமுக இலக்கிய அணி செயலளர் வளாமதி, முன்னாள் அமைச்சர் சோமசுந்தரம், மாவட்ட செயலாளர் கள் ராஜேந்திரன், வாலாஜா பாத்கணேசன், முன்னால் எம்.எல்.ஏ மனோகரன், பாட்டாளிமக்கள் கட்சி திருக்கச்சூர் ஆறுமுகம், பொன்.கங்காதரன், ராதாகிருஷ்ணன், வாசு, ஏகாம்பரம், மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளர் வேலாயுதம், ஆனூர் பக்தவச்சலம், ஒன்றியசெயலாளர் குமரவேல், மாவட்ட,, நகர, பேரூர் கழக நிர்வாகிகள், மற்றும் பா.ஜ.க, தே.மு.தி.க., த.மா.கா., புரட்சிபாரதம், உள்ளிட்ட கூட்டணி கட்சிநிர்வாகிகள் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Similar News