செய்திகள்

தேர்தல் பிரசாரம் - ராகுல் காந்தி ஏப்ரல் 2வது வாரம் தமிழகம் வருகை

Published On 2019-03-28 13:48 IST   |   Update On 2019-03-28 13:48:00 IST
தேர்தல் பிரசாரத்திற்காக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஏப்ரல் 2வது வாரம் தமிழகம் வருகிறார். விரைவில் தேதி முடிவாகும் என்று காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. #LokSabhaElections2019 #RahulGandhi #Congress
சென்னை:

தேர்தல் களம் சூடு பிடித்து வரும் நிலையில் அகில இந்திய தலைவர்களும் விரைவில் தமிழக பிரசாரத்துக்கு வர இருக்கிறார்கள்.

அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் - தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவாக தமிழகத்தில் பிரசாரம் செய்ய உள்ளார்.

இது தொடர்பாக தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள் அகில இந்திய தலைமையிடம் தேதி கேட்டுள்ளனர். ஏப்ரல் 2-வது வாரம் அவரது பிரசாரம் இருக்கும். விரைவில் தேதி முடிவாகும் என்று காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

ராகுல் காந்தி சமீபத்தில் கன்னியாகுமரி சென்றார். அப்போது சென்னையில் ஒரு கல்லூரி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

எனவே இனி வரும் போது மற்ற நகரங்களையும் ஒருங்கிணைக்கும் வகையில் பயண திட்டம் வகுக்கப்படும் என்று கூறப்படுகிறது.



பிரியங்காவையும் தேர்தல் பிரசாரத்துக்கு வரும் படி அழைத்துள்ளனர். தென் மாநிலங்களில் ஒரு மாநிலத்துக்கு ஒரு இடம் என்ற அளவிலாவது அவர் பிரசாரத்துக்கு வர வேண்டும்.

அவரது வருகை காங்கிரஸ் தொண்டர்கள் மற்றும் பெண்கள் மத்தியில் உற்சாகத்தை கொடுக்கும் என்று காங்கிரஸ் நிர்வாகிகள் தெரிவித்தனர். #LokSabhaElections2019 #RahulGandhi #Congress
Tags:    

Similar News