செய்திகள்

தூத்துக்குடி தொகுதியில் போட்டியிடும் கனிமொழி-தமிழிசைக்கும் இடையேயான ஒற்றுமைகள்

Published On 2019-03-23 07:52 GMT   |   Update On 2019-03-23 07:53 GMT
பாராளுமன்ற தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிடும் கனிமொழிக்கும், தமிழிசைக்கும் இடையேயான ஒற்றுமைகள் பற்றி பார்க்கலாம். #LSPolls #Kanimozhi #TamilisaiSoundararajan
பாராளுமன்ற தேர்தலில் தூத்துக்குடி தொகுதி நட்சத்திர அந்தஸ்தைப் பெற்றுள்ளது. இங்கு தி.மு.க. கூட்டணி வேட்பாளராக தி.மு.க.வின் மாநில மகளிரணி செயலாளரான கனிமொழி எம்.பி.யும், அ.தி.மு.க. கூட்டணி சார்பாக பா.ஜ.க. மாநில தலைவரான தமிழிசை சவுந்தரராஜனும் போட்டியிடுவது தான் இதற்குக் காரணம்.

எதிரெதிர் துருவங்களான இந்த இரு வேட்பாளர்களும் இங்கு களத்தில் இறங்கினாலும் இவர்கள் இருவருக்குமிடையே சில ஒற்றுமைகளும் உள்ளன. பெண் வேட்பாளர்களான இருவரின் பெயர்களும் தமிழின் சிறப்பை உணர்த்தும் பெயர்களாகும். அத்துடன் இவ்விருவரும் தமிழ் இலக்கியத்தில் ஆர்வம் கொண்டவர்கள். இருவருமே பிரபல அரசியல்வாதிகளின் வாரிசுகள் என்பது குறிப்பிடத்தக்கது.



கனிமொழியின் தந்தையான தி.மு.க.வின் முன்னாள் தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான கருணாநிதி, முத்தமிழறிஞர் என்று போற்றப்பட்டவர். தமிழிசையின் தந்தையான தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் குமரி அனந்தன், இலக்கியச் செல்வர் என்று போற்றப்படுபவர்.

தென் தமிழகத்தின் கடைக்கோடியான தூத்துக்குடி தொகுதியில் போட்டியிடும் கனிமொழி, தமிழிசை ஆகிய இருவரும் தமிழகத்தின் தலைநகரான சென்னையில் வசித்து வருபவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. #LSPolls #Kanimozhi #TamilisaiSoundararajan
Tags:    

Similar News