உள்ளூர் செய்திகள்

இருசக்கர வாகனம் மீது பேருந்து மோதி வாலிபர் பலி

Published On 2022-12-31 15:39 IST   |   Update On 2022-12-31 15:39:00 IST
மருத்துவமனைக்கு வந்த போது விபத்து

அரியலூர்:

திருச்சி மாவட்டம், உறையூர் காவேரி நகர், 6வது தெருவைச் சேர்ந்த திருஞானசம்பந்தம் மகன் விக்னேஷ்ரவன்(வயது24). இவர் ெகாரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்காக அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு இரு சக்கர வாகனத்தில் வேகமாக சென்று கொண்டிருந்தார். கீழப்பழுவூர் தனியார் சிமென்ட் ஆலை அருகே சென்று போது, முன்னால் சென்ற இரு சக்கர வாகனம் மீது மோதிவிட்டு முந்தியுள்ளார். அப்போது எதிரே அரியலூரில் இருந்து தஞ்சாவூர் நோக்கிச் சென்ற அரசுப் பேருந்து விக்னேஷ்வரன் மீது மோதியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்து வந்த கீழப்பழுவூர் காவல் துறையினர் சடலத்தை மீட்டு அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News