உள்ளூர் செய்திகள்

தற்கொலை செய்த  கொண்ட நாகராஜன்.

விழுப்புரத்தில் தூக்கு போட்டு வாலிபர் தற்கொலை

Published On 2022-08-26 09:21 GMT   |   Update On 2022-08-26 09:21 GMT
  • விழுப்புரத்தில் தூக்கு போட்டு வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
  • இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விழுப்புரம்:

விழுப்புரம் பூந்தோட்டம் நாராயண நகர் நேதாஜி வீதியை சேர்ந்தவர் நாகராஜன் மகன் தமிழ்ச்செல்வன் (வயது 24) பட்டதாரி. இவர் கடந்த 2 ஆண்டுகளாக மனநிலை பாதிக்கப்பட்டு இருந்தார். இந்நிலையில் நேற்று இவரது வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த வீட்டில் உள்ளவர்கள் இவரை மீட்டு விழுப்புரம் மேற்கு போலீசாருக்கு தகவல் தெரி வித்தனர். தகவல் அறிந்த விழுப்புரம் மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரயோத பரிசோ தனைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

Similar News