உள்ளூர் செய்திகள்

உடலில் மின்சாரத்தை பாய்ச்சி தற்கொலை செய்த வாலிபர்- மனைவி பிரிந்து சென்றதால் விபரீத முடிவு

Published On 2023-03-02 12:12 IST   |   Update On 2023-03-02 12:12:00 IST
  • வாழ்க்கையில் வெறுப்படைந்த சண்முகராஜ் வீட்டின் மாடி அறையில் தனது கையில் மின்வயரை சுற்றிக்கொண்டு சுவீட்சை போட்டார்.
  • தற்கொலை குறித்து சிவகாசி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

விருதுநகர்:

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள பெரியபுளியம்பட்டியை சேர்ந்தவர் மல்லிகா. இவரது மகன் சண்முகராஜ் (வயது 37). தொழிலாளியான இவருக்கு திருமணமாகிவிட்டது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மனைவி பிரிந்து சென்றுவிட்டார். இதனால் சண்முகராஜ் விரக்தியில் இருந்துள்ளார். அடிக்கடி தனது தாயாரிடம் தனது மனைவியை சமரசம் செய்து சேர்த்து வைக்கும்படி கூறி உள்ளார்.

இதுகுறித்து பலமுறை மல்லிகாவும் பேசி உள்ளார். ஆனால் மருமகள் வீட்டுக்கு வர மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த சண்முகராஜ் வீட்டின் மாடி அறையில் தனது கையில் மின்வயரை சுற்றிக்கொண்டு சுவீட்சை போட்டார். இதில் கண்ணி மைக்கும் நேரத்தில் மின்சாரம் பாய்ந்து சண்முக ராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து அவரது தாயார் மல்லிகா கொடுத்த புகாரின்பேரில் அருப்புக்கோட்டை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சிவகாசி ஆயில் மில் காலனியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். இவரது மகன் காளிமுத்து (35). ஆட்டோ டிரைவரான இவர் அடிக்கடி மது குடித்ததாக தெரிகிறது. சம்பவத்தன்று வீட்டின் மாடியில் காளிமுத்து தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து சிவகாசி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Tags:    

Similar News