உள்ளூர் செய்திகள்

குடும்ப தகராறில் வாலிபர் தற்கொலை

Published On 2022-07-11 14:59 IST   |   Update On 2022-07-11 14:59:00 IST
  • பைதுல்லா தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார்.
  • கிருஷ்ணகிரி டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி டவுன் போலீஸ் சரகம் பழையகோட்டை காந்தி ரோடு பகுதியை சேர்ந்தவர் பைதுல்லா (வயது 29). இவருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்துள்ளது. போதையில் வீட்டுக்கு சென்ற பைதுல்லா மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் மனம் உடைந்தார். இதனால் நேற்று பைதுல்லா தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து கிருஷ்ணகிரி டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News