மதுபோதையில் பட்டாசு வெடித்து கையை இழந்த வாலிபர்.
ஓசூரில் பாதுகாப்பின்றி பட்டாசு வெடித்த வாலிபர்: மதுபோதை கேளிக் "கை"யால் "கை"யை இழந்த பரிதாபம்
- ஆட்டோபாம் ஒன்றை தனஞ்செய், கையில் பிடித்தபடியே வெடிக்க செய்துள்ளார்.
- மணிக்கட்டு வரை அனைத்தும் சிதைந்து போய்விட்டது.
ஓசூர்,
ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் தனஞ்செய் (வயது 22). இவர், தனது சகோதரர் மற்றும் நண்பர்களுடன் ஓசூர் சின்ன எலசகிரி பகுதியில் தங்கியிருந்து அங்குள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார்.
தீபாவளி பண்டிகையை யொட்டி தனஞ்செய் தனது நண்பர்களுடன் கொண்டாட்டத்தில் ஈடுபட்டார். போதையின் உச்சத்தில் இருந்த அவர் பாதுகாப்பு இல்லாமல் கைகளில் பட்டாசுகளை வெடித்தார். அப்போது ஆட்டோபாம் ஒன்றை தனஞ்செய், கையில் பிடித்தபடியே வெடிக்க செய்துள்ளார்.
இதில் ஆட்டோ பாம் வெடித்து அவரது வலது கையில் விரல்கள், உள்ளங்கை, மணிக்கட்டு வரை அனைத்தும் சிதைந்து போய்விட்டது.
அலறித்துடித்த அடைந்த அவரை நண்பர்கள் மீட்டு,உடனடியாக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சைக்காக அனுமதித்த னர். தற்போது அவர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.