உள்ளூர் செய்திகள்

சேதமான அரசு பஸ்.

அரசு பஸ்சை சேதப்படுத்திய வாலிபர் கைது

Published On 2022-09-27 09:43 GMT   |   Update On 2022-09-27 09:43 GMT
  • பஸ்சை வழிமறித்து ஏன் இப்படி பஸ் ஓட்டுகிறீர்கள் என்று கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
  • ஆத்திரமடைந்து பஸ் முன், பின் கண்ணாடிகளை உடைத்தார்.

நாகப்பட்டினம்:

நாகையில் இருந்து கங்களாஞ்சேரி வழியாக திருவாரூர் செல்லும் அரசு பஸ்சை வைப்பூர் பகுதியை சேர்ந்த திருநாவுக்கரசு (வயது 42) என்பவர் ஓட்டி சென்றார்.

அப்போது கங்களாஞ்சேரி கடைத்தெருவில் மோட்டார் சைக்கிளில் வந்த கங்களாஞ்சேரி புளியந்தோப்பு விஜய் (23) என்பவர் பஸ்சை வழிமறித்து ஏன் இப்படி பஸ் ஓட்டுகிறீர்கள் என்று டிரைவர் திருநாவுக்கரசுவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

வாக்குவாதம் முற்றி விஜய் ஆத்திரம் அடைந்து செங்கல்லை எடுத்து பஸ்சின் முன்பக்கம், பின்பக்க கண்ணாடிகளை உடைத்தார்.

கண்ணாடி துகள்கள் பட்டு டிரைவருக்கு முகத்தில் காயம் ஏற்பட்டு திருவாரூர் அரச மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் திருக்கண்ணபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரவி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விஜயை கைது செய்தனர்.

Tags:    

Similar News