கோவையில் சிறுமியை பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய வாலிபர் கைது
- வேறு ஒருவருடன் திருமணமான பிறகும் சிறுமியுடன் நெருங்கி பழகி வந்தார்
- வீட்டிற்கு வலுகட்டாயமாக அழைத்து சென்று அத்துமீறல்
கோவை,
கோவை அருகே உள்ள பகுதியை சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இவர் 11-ம் வகுப்பு வரை படித்து விட்டு வீட்டில் இருந்து வந்தார்.
அதே பகுதிைய சேர்ந்தவர் அவினாஷ்(வயது24). அருகேகருகே வசிப்பவர்கள் என்பதால் இவருக்கு சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டது. 2 பேரும் அடிக்கடி சந்தித்து நட்பை வளர்த்தனர்.
இந்த நிலையில் ஆட்டோ டிரைவருக்கு வேறு ஒரு பெண்ணுடன் திருமணமாகி விட்டது. திருமணத்திற்கு பிறகும் அவினாஷ் சிறுமியுடன் பழகி வந்தார்.
கடந்த மார்ச் மாதம் 23-ந் தேதி சிறுமி வீட்டில் இருந்தார். அப்போது அங்கு வந்த அவினாஷ் சிறுமியை தன்னுடைய வீட்டிற்கு வருமாறு வலுகட்டாயமாக அழைத்து சென்றார். அங்கு வைத்து சிறு மியை பலாத்காரம் செய்து விட்டார். இது போன்று பலமுறை செய்துள்ளார். மேலும் இதனை யாரிடமாவது தெரிவிக்க கூடாது எனவும் மிரட்டினார்.
இந்த நிலையில் சிறுமிக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதைய டுத்து பெற்றோர் அவரை ஆஸ்பத்திரிக்கு சென்று பரிசோதித்தனர். அப்போது அவர் 6 மாத கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.
இதைகேட்டு அதிர்ச்சியான பெற்றோர் சிறுமியிடம் விசாரித்தனர். அப்போது சிறுமி, தனக்கு நடந்தவற்றை தெரிவித்தார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் பேரூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் அவினாஷ் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.