உள்ளூர் செய்திகள்
திருட்டுத்தனமாக மது விற்ற வாலிபர் கைது
- திருட்டுத்தனமாக மது விற்று கொண்டிருந்த சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த ஹரிஹரனை போலீசார் கைது செய்தனர்.
- ஹரிஹரனிடம் இருந்து 28 மது பாட்டில்களை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
வண்டலூர்:
செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் டாஸ்மாக் கடை அருகே திருட்டுத்தனமாக மது விற்கப்படுவதாக கூடுவாஞ்சேரி மதுவிலக்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து உடனடியாக சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்று பார்த்தபோது அங்கு திருட்டுத்தனமாக மது விற்று கொண்டிருந்த சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த ஹரிஹரன் (வயது 23) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 28 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
இது குறித்து கூடுவாஞ்சேரி மதுவிலக்கு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.