உள்ளூர் செய்திகள்

கணவர் மீது சந்தேகத்தில் இளம்பெண் தற்கொலை

Published On 2023-09-06 14:41 IST   |   Update On 2023-09-06 14:41:00 IST
  • செல்போனுக்கு புதிய எண்ணில் இருந்து வீடியோகால் வந்ததால் வேதனை
  • வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்

கருமத்தம்பட்டி,

கோவை கருமத்தம்பட்டி அருகே உள்ள உஞ்சாபாளையம் குட்டை தோட்டத்தை சேர்ந்தவர் மல்லிகா அர்ஜூன். இவரது மனைவி திவ்யா (வயது 31). இவர்க ளுக்கு கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. ஒரு மகன் உள்ளார்.

சம்பவத்தன்று திவ்யா கணவர் மற்றும் மகனுடன் ஈரோடு பட்டக்காரன் பாளையத்தில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்கு சென் றார். அப்போது மல்லிகா அர்ஜூனின் செல்போனுக்கு புதிதாக ஒரு எண்ணில் இருந்து வீடியோ அழைப்பு வந்தது. உடனே திவ்யா போனை எடுத்து பேச முயன்றார். ஆனால அந்த நபர் செல்போன் இணைப்பை துண்டித்து விட்டார்.

இதனால் திவ்யாவுக்கு தனது கணவரின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டது. இதுபற்றி அவர் தனது கணவரிடம் கேட்டார். அப்போது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனை பார்த்த வீட்டில் இருந்தவர்கள் கணவன்-மனைவி இருவரையும் சமாதானம் செய்தனர். பின்னர் திவ்யா கணவர் மற்றும் மகனுடன் உஞ்சாபாளையத்துக்கு திரும்பினார்.

மறுநாள் மல்லிகா அர்ஜூன் வேலைக்கு புறப்பட்டு சென்றார். அப்போது கணவரை செல்போன் மூலமாக தொடர்பு கொண்ட திவ்யா மீண்டும் தகராறு செய்தார்.

இதனையடுத்து மல்லிகா அர்ஜூன் அவரது செல்போனை சுவிட்ச் ஆப் செய்தார். இதன் காரணமாக வாழ்க்கையில் விரக்தி அடைந்த திவ்யா தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். வேலை முடிந்து வீட்டிற்கு திரும்பிய அவரது கணவர் மனைவி தூக்கில் பிணமாக தொங்குவது கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் அவர் இதுகுறித்து கருமத்தம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசா ரணை நடத்தினர்.

பின்னர் போலீசார் தற்கொலை செய்து கொண்ட திவ்யாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து கருமத்தம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News