உள்ளூர் செய்திகள்
பண்ருட்டி அருகே இளம் பெண் மாயம்
- அனிதா பி.ஏ.முடித்துவிட்டு வீட்டில் இருந்து வந்தார்.
- பண்ருட்டி போலீசில் அவரது தாய் அஞ்சலாட்சிபுகார் கொடுத்தார்.
கடலூர்:
பண்ருட்டி அருகே உள்ள முத்தாண்டிகுப்பம் அடுத்த அன்னக்காரன் குப்பம் வடக்கு தெருவை சேர்ந்தவர் குமரவேல். இவரது மகள் அனிதா (23). இவர், பி.ஏ.முடித்துவிட்டு வீட்டில் இருந்து வந்தார்.நேற்று அதிகாலை 4 மணிக்கு வீட்டிலிருந்தவர் காணாமல் போனார். பல இடங்களில் தேடி யும் கிடைக்காததால். பண்ருட்டி போலீசில்வஅவரது தாய் அஞ்சலாட்சிபுகார் கொடுத்தார். புகாரில் பெத்தான்குப்பத்தை சேர்ந்த சிவமணியை (30) அனிதா காதலித்து வந்ததாகவும் அவரை திருமணம் செய்து கொண்டதாகவு ம்கூறியுள்ளார்.